Sunday 12 August 2018

சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் நூல் வெளீயீட்டு விழா 19.08.2018

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் தலைவர் ,தொல்லியல் பிரிவு (பணிப்பாளர் மத்திய கலாசார நிதியம்) சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் உருத்ரா மாவத்தை கொழும்பு - 06ல் பேராசிரியர் சி.தில்லைநாதன் வாழ்நாள் பேராசிரியர்
பேராதனைப்பல்கலைக்கழகம் தலைமையில் நடைபெறவுள்ளது.

தனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" என்ற நூலையும், ஈழம் சுதந்திரம் அடைந்த
காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மரபுரிமைகள் மறைந்து போகின்றன அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கம், கோரிக்கைகளின் அடிப்படையில் மரபுரிமைச் சின்னங்களை எவ்வாறு கண்டறிந்து ஆவணப்படுத்துவது என்பது தொடர்பாக "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்" என்ற நூலையும் ஆக்கியுள்ளார்.
இவ் இரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்....

No comments:

Post a Comment

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...